tamilnadu

img

ஹெஜ்.சி.எல் தலைவராக ரோஷ்னி மல்ஹோத்ரா நியமனம்...  

சென்னை 
நாட்டின் பிரபல தகவல் தொழிநுட்ப நிறுவனமான ஹெஜ்.சி.எல் உத்தர பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான கிரேட்டர் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி 44 நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. 

இந்நிலையில் இந்த நிறுவனத்தை உருவாக்கியவரும், நிறுவனத்தின் தலைவருமான ஷிவ் நாடார் சமீபத்தில் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனையெடுத்து அவரது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஹெஜ்.சி.எல் கார்பரேசனின் நிர்வாக இயக்குனர், ஐ.டி வாரியத்தின் துணை தலைவர், சிவன் நாடார் குழுமத்தின் அறங்காவலராகவும் பணியாற்றிய அனுபவம் உடையவர். 2017-19 வரை உலகின் சக்திவாய்ந்த பெண்களின் (போர்ப்ஸ்) பட்டியலில் இடம்பிடித்தவர்.    

தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய ஷிவ் நாடார் நிர்வாக இயக்குனராகவும், தலைமை வியூக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.   

;